11th Year Celebration of Kaviarusu Kannadasan Vizha

posted in: விழாக்கள் | 0

கவிஞர் கண்ணதாசன் விழாவையொட்டி, காரைக்குடி கண்ணதாசன் சமூக அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் கவிஞர் அரு.நாகப்பன், எழுத்தாளர் கயல் தினகரன் ஆகியோருக்கு கவியரசர் விருதுகள் வழங்கப்பட்டன.

கண்ணதாசன் விஸ்வநாதன் அறக்கட்டளை சார்பில் 11-ஆம் ஆண்டு கவியரசர் கண்ணாதாசன் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், கவிஞர் அரு.நாகப்பன், எழுத்தாளர் கயல் தினகரன் ஆகியோருக்கு கவியரசர் விருதுகளை இலக்கியச் சிந்தனை அமைப்பின் நிர்வாகி ப.லட்சுமணன் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பரிசுகளை வழங்கினார்.

தமிழ்மொழி வளர்ச்சிக்கு கண்ணதாசன் ஆற்றிய பணிகள் குறித்து இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் விளக்கிப் பேசினர்.

முன்னதாக ஏ.வி.எம்.சரவணன் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்ச்சியில் குமாரராணி மீனா முத்தையா, தொழிலதிபர் நல்லிகுப்புசாமி செட்டி, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் எம்.முரளி, கவிஞர் காவிரி மைந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Kaviyarasu-Kannadasan-Vizha-2014-Photos-4

Left TO Right : M MURALI, MD, SRI KRISHNA SWEETS, P LAKSHMANAN, A NAGAPPAN, S P BALASUBRAMANIAM, NALLI KUPPUSAMY CHETTY, KAYAL DINAKARAN

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற கவிஞர் கண்ணதாசன் விழாவில் பங்கேற்ற (இடமிருந்து) இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் எம்.முரளி, இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், இலக்கியச் சிந்தனை அமைப்பின் நிர்வாகி ப.லட்சுமணன், குமாரராணி மீனா முத்தையா, கவியரசர் விருது பெற்ற எழுத்தாளர் கயல் தினகரன், கவிஞர் அரு.நாகப்பன், நல்லிகுப்புசாமி செட்டி, பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

Award