Arulmigi Kottai Mariamman Temple-Hosur

ஓசூர் கோட்டை மாரியம்மன் திருக்கோயில்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கோட்டை மாரியம்மன் திருக்கோயில் மணப்பேறு மற்றும் மகப்பேறு பிரார்த்தனை ஸ்தலமாக விளங்குகிறது. கருவறையில் புற்றே மூலவராக சுயம்பு கோட்டை மாரியம்மனாக வழிபடப்படுகிறார்.

துர்க்கை அம்மன் சிலையும் ஏராளமான நாகர் உருவங்களும் வழிப்படுகிறார்கள். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நாள் முழுவதும் நடைதிறந்திருக்கும்.

இக்கோயில் அருகில் ராமர் மற்றும் சிவன் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. இன்று ஓசூரில் உள்ள அம்மன் கோயில்களில் பிராதனமாகத் திகழ்கிறது.