Sri Kalapeetam Award Function – Part 1

posted in: விழாக்கள் | 0

Sri Kalapeetam Award Function 04-10-2014 6.pm Srinivasa Sashtri Hall A/C Mylapore, Chennai-600004

ஸ்ரீகலாபீடம் விருது வழங்கும் விழா 4-10-2014 அன்று மாலை 6 மணியளவில் சென்னை, மயிலாப்பூர், 40, லஸ் சர்ச் ரோட்டில் அமைந்திருக்கும் சீனுவாச சாஸ்திரி ஹாலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீகலாபீடம் விருதுகள் 4-10-2014 அன்று மாலை 6 மணியளவில் சீனுவாச சாஸ்திரி ஹாலில் மாண்புமிகு நீதியரசர் பொன் பாஸ்கரன் அவர்கள் தலைமை ஏற்று விருதுகளை வழங்கி கௌரவித்தார்கள்.

சிறப்பு விருந்தினராக சின்னத்திரை நடிகர் நவரசச்செல்வர் எம்.ராமச்சந்திரன் சின்னத்திரை நடிகர் நகைச்சுவைமணி திரு.ஜோக்கர் துளசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாலைமுரசு, கோகுலம் கதிர், பாம்பன் சுவாமிகள் பத்திரிகை, ஷாலினி டி.வி. மூன் டி.வி, ஜோதிடர் மதுரை மடப்புரம் விலக்கு கரு.கருப்பையா B.Sc., M.A., M.Phil, B.Ed.,SMP அவர்கள் பங்கு பெற்று நேயர்களின் நேரடி ஜோதிட கேள்விகளுக்கு பதில் அளித்தார். விரைவில் தொலைக்காட்சிகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.

சிறப்பு அழைப்பாளர்களாக கந்தசஷ்டி திலகம் குகஸ்ரீ D.பாபு ராஜேஸ்வரி சுவாமிகள், திருப்புகழ் அமிர்தவாரி பக்தமாமணி ராஜேந்திரனார்.M.A., வணிகமாமணி திரு.K.வாசுதேவன் சமூக நல ரத்னா B.குமரேசன் BBA.,D.P.Tech மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். விருது பெற்றவர்கள் விவரம் அழைப்பிதழில் காண்க.

பாம்பன் சுவாமிகள் மாத இதழ் ஆசிரியர் திரு.கலைச்செல்வன் அவர்கள் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள்.
விழா இனிதே நடந்தது. அடுத்த நிகழ்ச்சி நவம்பர் மாத இறுதியில் நடைபெறும் என கலாபீடம் செயலாளர் திரு.பாரி அவர்கள் கூறினார்கள்.

invitation01

invitation02