VEERA SUBBAIAH MADAM – THAVATHIRU SRI A.VIDHYANANDAGIRI SWAIGAL GURUPOOJAI – Part – 2

posted in: விழாக்கள் | 0

VEERA SUBBAIAH MADAM PURASAWAKKAM THAVATHIRU SRI A.VIDHYANANDAGIRI SWAIGAL (aGED 102) GURUPOOJAI 26-09-2014

வீர சுப்பையா மடம் – புரசைவாக்கம், மடாதிபதி தவத்திரு. ஸ்ரீ ஆ.வித்யானந்தகிரி சுவாமிகள் (வயது 102) அவர்கள் தலைமையில் – குருபூஜை. 1952ம் ஆண்டு முதல் வீரசுப்பையா மடத்தின் மடாதிபதியாக பரிபாலித்து வருகிறார், தவத்திரு ஸ்ரீ.ஆ.வித்யானந்தகிரி சுவாமிகள்.

மகாகுரு அவர்களின் குருபூஜை 26-09-2014 அன்று காலை 11 மணியளவில், அண்ணார் அவர்களின் அருளாசியோடு, தவத்திரு ஸ்ரீ.ஆ.வித்யானந்தகிரி சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. மடத்தில் சிவபெருமானுக்கு அபிஷேகம் ஆராதனை செய்வித்து, சிறப்பாக ஆசி வழங்கப்பட்டது.

பாரம்பரிய மருத்துவர் திரு.சக்திசுப்பிரமணியன், பாம்பன்சுவாமிகள் ஆன்மீக மாத இதழ் ஆசிரியர் குகஸ்ரீ வீ.கலைச்செல்வன், பாம்பன்சுவாமிகள் அருள்நெறி அறக்கட்டளை செயலர் திரு.ரவிச்சந்திரன், கயிலைமாமணி திரு.சண்முகசுந்தரம் மற்றும் ஸ்ரீகலாபீடம் செயலர் திரு.பாரி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

எல்லா ஏற்பாடுகளையும் திரு.பாபு அவர்கள் வெகு சிறப்பாக செய்து பாராட்டு பெற்றார்கள். அனைவருக்கும் பசியாற்றல் (அன்னதானம்) செய்விக்கப்பட்டது.

மாலை நிகழ்ச்சிகள் அனைத்தும் முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் நீதிமன்றத் தீர்ப்பால் ரத்து செய்யப்பட்டது.