kumbtemplevinayagarஆலயம் தொழுவது சாலவும் நன்று… கோபுர தரிசனம் கோடி புண்ணியம்… புணருத்தாரணம் பூர்வ புண்ணியம்… கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்… – என்றெல்லாம் நம் முன்னோர்கள் கூறி கேட்டிருக்கிறோம்.அத்தகைய புகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன.

மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.  இந்த இணையதளத்தின் மூலம் இதுவரை கும்பாபிஷேகம் கண்ட கோயில்களையும், கும்பாபிஷேகக் காட்சிகளையும் எல்லோரும் கண்டு இன்புற்றிருக்க வரிசைப்படுத்தி வழங்குகின்றோம்.

ஊர் கூடி தேர் இழுக்கவேண்டும் என்பார்கள்.. அப்படி எத்தனையோ நல்ல உள்ளங்கள் ஒன்று கூடி அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகங்களை செய்கிறார்கள். அந்த நல்ல உள்ளங்களைப் போற்றவும், அந்த மங்கலக் காட்சியை உலகோர் பார்வைக்கு வைக்கவும் இந்த முயற்சி செய்யப்பட்டிருக்கிறது. அந்த மஹா அஷ்ட பந்தன கும்பாபிஷேகங்களை நேரில் காண முடியாதவர்கள், இந்த இணையதளத்தில் கண்டு பல்லாயிரக்கணக்கானோர் பயன் பெறட்டும்.

Note :  Select your language provided in the right side corner to translate this page into your own language.
(By Selecting your language given in language list)

Translate »